Saturday 19 November 2011

தற்கொலை செய்துக்க போறேன்னு ஸ்டேடஸ் அப்டேட் பண்ணும் சைக்கோகள் Tamil Tweets



1) இப்போதும் நம்மை வெள்ளையர்கள் தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை . இன்றைக்கு நாக்கை.@nomarjoas 




2)முன்னே சென்றவர்கள் வென்றார்களா தோற்றார்களா என்பதை பாதை ஒருபோதும் சொல்வதில்லை..  @

3)  தற்கொலையை ரசித்து, அனுஅனுவாய் அனுபவித்து, மெதுவாய் சுகமாய் செய்துகொள்ள ஒரே வழி புகைத்தல். @

4)  அதிகமாய் தற்பெருமை அடிக்கும் நபரிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறதென்றால் அவர் அடுத்தவரை பற்றி அதிகம் பேசமாட்டார்.! @ 

5)   நேரா போற ரோட்டில ,ஏண்டா வளைஞ்சு வளைஞ்சு வண்டி ஓட்டுறீங்க ? அசாருதீன் மவன பார்க்கணும்னு ஆசையா ? @ 

6)  உன்னுடைய தொலைப்பேசி அழைப்பு வரும் போதெல்லாம் vibrate ஆவதென்னவோ என்னுடைய இதயமே!! @

7)  கம்ப்யூட்டர் கீ போர்ட் மட்டுமே நம் காதலை புரிந்து வைத்துள்ளது. U-வும் I-யும் பக்கம் பக்கத்தில்.! @




8)  தன்னால்தான் மொத்த ஆபீஸே நடக்கிறது என நினைக்கும் மேனஜரை பார்த்தால்...,  750 ஸ்பேர் பார்ட்ஸ் லாரியும்,தொங்கும் எலுமிச்சையும் நினைவுக்கு வருகிறது.@ 

9)  பேட்டரி லோவென தெரிந்தும் செல்போனை சித்திரவதை படுத்துவது நம்மாளுங்க  மட்டும் தானா # டவுட்டு @ 

10)  google ஐ நம்பினோர் கைவிடப்படார் !!! @

11)பகல்லயே நமீதா தெரியாதவனுக்கு., இருட்டுல இலியானாவா தெரியப் போறா  புதுமொழி @ 

12)  இட்லி சாப்புடுறேன், டிவி பாக்குறேன்ற மாதிரியே “தற்கொலை செய்துக்க போறேன்”னு ஸ்டேடஸ் அப்டேட் பண்ணுறானுகளே #அட சைக்கோ பதருகளா.. @

13)  ஆன்லைன்ல ஒரு ஆஸ்திரேலியா புள்ள சிக்கிடுச்சுனு நம்பர் கொடுத்தா..படுபாவி மக அவளும் மிஸ்-கால்தான் கொடுக்குறா.. ! @ 




14)  ராமராஜன் பாட்டு பாடியே பசுவிடம் பால் கறப்பாரே அது என்ன வகையான வர்மம் . @

15)  அட்வைஸ் பண்ணுறேன்னு நினச்சுக்காத என ஆரம்பித்து அட்வைஸ் மட்டுமே பண்ணுகிறார்கள் !!!. @ 

16)  எல்லோருக்கும் வயிற்றில் தொப்பை இருக்குமென்றால் கேப்டனுக்கு கழுத்திலும் இருக்கிறதே., # மெடிக்கல் மிராக்கில் ! @

17)  போதிதர்மனை பார்த்து தமிழ் உணர்வு பொங்கியவர்களுக்கு வேலாயுதம் பார்த்து தேசப்பற்று பொங்காதது ஆச்சர்யமே ! # லொள்ளு @

18 )  ஐஸ்வர்யாராயின் குழந்தை சிறந்த பாடகியாக வருவார் என நியுமராலஜி நிபுணர்கள் கூறினர் # டேய் அந்த குழந்தைக்கு இன்னமும் சரியா அழ கூட தெரியாதுடா @

19)  பேசாமல் இந்த வெஸ்ட்இண்டீஸ் நியுமராலஜி பார்த்து தங்கள் பெயரை வேஸ்ட்இண்டீஸ்என மாற்றிக்கொள்ளலாம்.! ரொம்ப வேஸ்டா போயிட்டாங்க @

20 ) சந்தேகம்,பயம்,எச்சரிக்கை கலந்த முகத்தை பார்க்க வேண்டுமென்றால் தன் பெண்ணை காலேஜ் பஸ்சிற்கு கொண்டுவந்து இறக்கிவிடும் அப்பாக்களை பாருங்கள். @  




21) காசு இல்லாமையால் கடன் பட்டோரை விட , ஆசை மிகுதியினால் கடனாளி ஆனவர்களே அதிகம் சரித்திரத்தில்! @ 

22)  எந்த இருவரும் நட்புறவோடு சுமுகமாய்த் தொடர, மூன்றாமவர் ஒருவரைப் பற்றிய கதையோ,புரளியோ தேவைப்படுகிறது.@ 

23 )  பையன் செல்போன் Dial call time அதிகமாகவும், பொண்ணு மொபைலில் Received call time அதிகமாகவும் இருந்தால்# பத்திகிச்சு பெத்தவங்களே @ 

24)  விஞ்ஞான வளர்ச்சியில் அவ்வபொழுது சந்தேகம்; ஆதிமனிதன் ஒரு கிலோமீட்டரை கடக்க எடுத்த அதே நேரம் தான் பீக் ஹவரில் நமக்கும்.! @

25) காதலிக்கும் பொழுது மனைவிக்கு நான் அதிகம் அனுப்பிய குறுந்தகவல் 'Where  r  u? கல்யாணத்திற்கு பிறகு அவள் அதிகம் அனுப்புவதும் அதுதான்.!!! @  

26)   இத்தாம் பெரிய இந்தியாவுல க்யுல மக்கள் நிற்காத ஒரே இடம் சுடுகாடு தான்.!!! @

27)  ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம். அதுல முதல் பொய் போட்டோஷாப் போயிட்டு வந்த பொண்ணு / பையன் போட்டோ.!!! @ 





28)  எதுக்குமே சிரிக்காதவன் பொட்டிக்கடை வைக்ககூடாது; எல்லாத்துக்கும் சிரிப்பவன் வட்டிக்கடை வைக்ககூடாது.!!! @t

29)   5 கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?   

30)  என்னதா பொண்ணுக கையெழுத்து பசங்கள விட நல்லா இருந்தாலும் அவங்க தலைஎழுத்து என்னவோ பசங்க கூடத்தான் கை கோர்த்தாகனும் வாழ்க்கைல.. @

31)   திரும்ப திரும்ப படித்தும் புரியவில்லையா நிச்சயமாக அது இலக்கியத்துவம் நிறைந்த நாவல் தான்.. @

32)  காதலும் சிகரட்டும் கிட்டத்தட்ட ஒன்னுதான், ஆரம்பம் வெளிச்சம் முடிவு சாம்பல்.@ vidupili 






33)  குடித்துக்கொண்டு வண்டி ஓட்டாதீர் # ஸ்பீட் பிரேக்கர தாண்டும்போது கொட்டி விடும் கவனம் @vidupili

34)  திருமண வீட்ல அடுத்தது நீதான்னு பெரியவங்க சொல்வாங்க.. அதே போல எழவு வீட்ல அவங்கள பார்த்து அடுத்தது நீங்கதான்னு சொன்னா நல்லாயிருக்குமா # டவுட்டு @ ashock_7

35 ) சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் தலைவரும், ஐநூறு பேர்கிட்ட அடிவாங்குற ஹீரோவும் செத்ததா சரித்திரம் இல்ல. @joyllin

2 comments:

தமிழ்கிழம் said...

செம tweets சகோ...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ??

சந்தானம் as பார்த்தா said...

//சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் தலைவரும்...

அன்னா ஹசாரேவா??

All are good..

Blogger Widgets