1) செல்போனில்: நடந்து கொண்டே பேசினால் அது பிசினஸ் நின்று கொண்டே பேசினால் அது நட்பு படுத்துக் கொண்டே பேசினால் அது காதல். @Samudra123
2) சவுதி அரேபிய மன்னருக்கு முதுகெலும்பில் ஆபரேசன் : முதுகெலும்பா ? இத நான் நம்பவே மாட்டேன்.@vidupili
3) மாசம் பூரா நாயா ஓடி ஓய்வதும், ஓய்ந்து ஓடுவதும் இந்த ஒரு sms க்குதான் Salary credited in your Account.@ramthamizh
4) நீங்கள் சாப்பிடும் உருளைக்கிழங்கு 2 நிமிடம் உங்கள் வாயிலும், 6 மணிநேரம் வயிற்றிலும் வாழ்நாள் முழுவதும் உங்கள் இடுப்பிலும் இருக்கிறது.@SeSenthilkumar
5) முதல் காதல் கடிதம் முன்னூறு முறை திருத்தி எழுதப்படுகின்றது; மூவாயிரம் முறை விரும்பி படிக்கப்படுகின்றது.! @thoatta
6) எத்தனையோ நண்பர்கள் லைப்ல வந்து போயிருந்தாலும் ஒரு சிலரின் காலடிகள் மட்டுமே அழியாமல் இருக்கின்றன@vidupili
9) ஜார்ஜ் புஷ் செய்ததைத்தான் ஒபாமாவும் செய்தான் ! அயல்நாட்டு அதிபர்களைக் கொன்று அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது ! @rdhakshina
10) ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது # நல்லா சம்பாதிக்கவும் தெரியனும் # இல்லேன்னா ஜீரோ தான். @sankar100382
11) லவ்வரே இல்ல,டேட்டிங் டிப்ஸ் அனுப்புறானுங்க sms ல ! #மொதல்ல லவ்வர அனுப்புங்கடா டேய்.@Vithuvaan
12) ராமன் போல ஒரு பையன் கிடைக்கனும்னா தசரதன் போல நான் வாழுறதில என்ன தப்பு ? @vidupili
13) பசங்க சைட் அடிப்பானுங்கங்கற நம்பிக்கையில்தான் அழகழகான புள்ளைங்கள பெத்து விட்டுருக்காங்க.. பெத்தவங்களுக்கு எப்படி நம்பிக்கை துரோகம் செய்யுறது?g4gunaa
14) எல்லோரும் என்னிடம் துக்கங்களை பகிர்ந்துகொள்ளுகிறார்கள்! அவர்களுக்கு குறைந்ததா இல்லையா தெரியாது! எனக்கு நிரம்பியது!@say_satheesh
15) வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வரும் வளர்ச்சி ஒரு வளர்ச்சியே அல்ல.@jeeatchennai
16) பிறர் முதுகு பின்னால் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை வேலை ”தட்டிக் கொடுப்பது மட்டும் தான்” @austinvijay
17) நிறைய நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை முழுமை பெறும்... அவை அனைத்தும் பெண்களாயிருந்தால் சீக்கிரமாவே முடிவை பெறும்...!!!@vinodhkrs
18 ) முள்வேலிக்கு பின் முன்னூறு குழந்தைகள் இருந்த சுவடு தெரியவில்லை. உலகஅழகி குழந்தைக்கு பெயர் என்னவென சிந்திக்கிறான் பச்சைத்தமிழன்.@karna_sakthi
19)நேரம் போவது தெரியாமல் உன்னோடு பேசி கொண்டிருக்கையில், எனக்கு ஒரே ஒரு கவலை இந்த நேரம் ஏன் போகின்றது என்று..@i_am_mano
20)காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களும் தன் பிள்ளைகளின் காதலை எதிரப்பது ஏன் # அவங்களாவது தப்பிக்கட்டுமேனுதான்.@srpodiyan
21) இங்கே கடலை போடக் காதல் முளைக்கிறது' # நவீன விவசாயம்@Senthilbds
22) சிக்னல்ல rightல போக வேண்டியவன் leftல நிக்குறதும், leftல போக வேண்டியவன் rightல நிக்குறதும்.. #எங்கிருந்துடா வரீங்க முடியல.@soniaarun
23)ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா? @pinjimanasu
24) ஓலைக்குடிசைக்குள் கஞ்சியோடு காத்திருப்பதுவும் காதல் தான்...@JanuShath
25) மனிதனால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாதது சகமனிதனின் அறிவைதான். @arasu1691
26) என் தலைக்கணத்தை சிறிது குறைத்த முடி திருத்துனருக்கு நன்றி.@Senthilbds
27) ஆப்பிள் மோகம் ஆதாம் ஏவாள் காலத்திலேயே தொடங்கி விட்டது. @Senthilbds
28)பாஸ் என்பவர் நாம் லேட்டாக போகும் போது சிக்கிரம் வருபவர். நாம் சீக்கிரமாக போகும் போது லேட்டாக வருபவர் @nagaiyar
29) தமிழ்நாடு இதுவரை சிரிப்பு போலீஸ், பொறுக்கி போலீஸ், போக்கிரி போலீஸ் என பார்த்தது,இந்த மாதம் குழந்தை போலீசை பார்க்கபோகிறது # ஒஸ்தி @thoatta
30) பேஸ்புக்க திறந்தா 100 New stories வெயிட் பண்ணுது ,,அதுல ஒரு ஸ்டோரிய எடுத்து சினிமா எடுத்துடலாமா . @udanpirappe
31) கல்யாணம் நிச்சயமானாவுடன் ஆணும் பெண்ணும் முதலில் செய்வது தங்கள் பழைய காதல் கடிதங்களை கிழித்தெறிவது தான்.!@thoatta
No comments:
Post a Comment