Friday 25 November 2011

வீராசாமியை பார்த்து வாயடைத்து போன கிங்காங் இயக்குனர்

1) உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!!
  வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!!



2) மனைவியை ஊருக்கு அனுப்ப ரயில் நிலையம் வரும் ஆண்கள் எனக்கு சிவாஜியாக தெரிகிறார்கள் # கண்ணுல சோகம்.. உள்ளுக்குள்ள உற்சாகம் .. உலக நடிப்புடா சாமி ! @g_for_guru




3) தூக்கம் :   அலாரம் அடிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது வருவது @  



4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @ 



5) தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!! @



6) ஏழாம் அறிவு சரித்திர படம்!  ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்! # கொலைவெறி விஜய் ஃபேன்ஸ் கிளப்" 



7) ஒஸ்தி படத்தில் சிம்புவின் போலீஸ் கெட் எப் ஐ பார்க்கும் போது சன் டிவி மலரும் மொட்டும் நிகழ்ச்சிக்கு வந்த சிறுவன் மாதிரி இருக்கு @



8) நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:
திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான். @




9)  ராமராஜன் நடிச்சபடம் வில்லுப்பாட்டுக்காரன்.அத பாத்துபுட்டு செத்துபோனான் எங்கஊட்டுக்காரன் 



10) கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்! 
     ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!! @ 



11)  நடுநிசி நாயும்...! குடிகாரன் வாயும்...! சும்மாவே இருக்காது போல 
  # ஒரே பெனாத்தல். @



12)  இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை,  மற்றும் தமிழக மீனவன்.! @




13) 6மாசபயணத்தில் செவ்வாய்கிரகம் செல்ல பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்:..  எங்காளுங்க சரக்கு அடிச்ச‌ 10 நிமிஷத்திலயே செவ்வாய்க்கு போய்டுவாங்க.@ 



14) பணத்தை துரத்தும் மனிதர்கள் தனக்கு பின்னால் தன் குடும்பம் வருவதை கூட மறந்து ஓடுகின்றனர். @ 



15) தோளுக்கு மேல் வளர்ந்தவனை அடிப்பதே தவறு,
      இப்படி வெட்டலாமா? # மரம்  



16)நல்ல குடும்பத்து பெண்கள் காதலில் விழுவதில்லையாமே ? அப்போ ,என் காதலி குடும்பம் அவ்வளவு கேவலமானதா ? @ 



17) பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
 இப்பொழுது "BOY FRIEND  " என்கிறார்கள். @ 



18) வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு
 நல்ல காரியத்திற்கு வருவதில்லை. @




19) பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் :
 அழுக்கு சட்டை - வெள்ளை சட்டை ! @ 



20) நாம் மாறும்போது தானும் மாறியும், நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. 
அதற்கு நம் நிழலே போதுமே! @ 



21) காசு இல்லாட்டி ஒண்ணுமே வாங்க முடியாதாமேன்னா கடன் வாங்கலாமேங்கறான் பக்கத்து டேபிள் கடங்காரன்.! @ 



22) காலையில் மனைவி திட்டியதற்கு நானும் பதிலுக்கு பயங்கரமாக திட்டிவிட்டேன்-  ஆபிஸ் ப்யூனை. @



23)  L  போர்டு ஸ்டிக்கர்னாலும் சூப்பர் ஸ்டைலா டிஸைன் பண்ணி கார்ல ஒட்டீருக்கீங்க பாஸ்! நல்லாருக்கு! என்றேன்!
 முறைத்தான்!  லயன்ஸ் கிளப்பாம்! :-) @ 



24) நகரத்தில் அறிவாளியாக இருப்பதை காட்டிலும் கிராமத்தில் வெகுளியாக இருப்பதை விரும்புகிறேன் -  நிம்மதி @



  • 25) எல்லோருமே நேர்வழியில வந்திருந்தா உலகம் இவ்வளவு முன்னேறியிருக்காதோ, என்னவோ..





  • 26)ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி... @thirumarant 




    27) make money னு ஒரு பக்கி mail அனுப்புது.. ஒரு வேல கள்ள நோட்டு அடிக்க சொல்லி கொடுப்பானுவளோ ???





    28)அன்று தாலாட்டைகேட்டு தாய்ப்பாலை குடித்து குழந்தைகள் வளர்ந்தன! 

    இன்று டப்பாங்குத்து பாடலைகேட்டு டப்பாபாலை குடித்து குழந்தைகள் 

    வளர்கின்றன!





    29)தமிழ்நாட்டுல கரண்ட் பில்ல ஆன்லைன்ல கட்ட வசதி இருக்கு, But..

    Computer ஆன் செய்ய தான் கரண்ட் வசதி இல்லை..என்ன கொடும சார் இது

    @Prabu_B 





    30) வாகனம் ஓட்டுதல் என்கிறது ஒரு கலை! எந்த மொடல் வாகனமாவே 


    இருந்தாலும் ஓட்டுறவன் கைலதான் அதோட அழகே! @Me_Newton









    31)  சச்சின் சதத்தை எட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். 94 அடித்ததற்காக எவருக்கும் பாராட்ட தெரியவில்லை! @






    32) தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ் 'ஒய் திஸ் கொலைவெறி' பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ 



    33) எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ???? @

    34) கிராபிக்ஸே இல்லாமல் எப்படி முழு படமும் எடுத்தார்கள்? 
    வீராசாமியை பார்த்துவிட்டு கிங்காங் இயக்குனர் குழப்பம்.! @  


    35) அடப்பாவிகளா.. ‘my' அப்படீன்றதே ரெண்டு எழுத்து. அதையும் சுருக்குறேன்னு 'ma' அப்படீன்னு மாடு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!


    36) புரட்சியாளர் ஆவதற்கு எளிய வழி புரிஞ்சது, புரியாதது எல்லாவற்றையும் கண்டபடி விமர்சனம் செய்யணும்.@ 


    37) செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
    ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.



    38)  ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்.@ 


    39) நேற்று சினிமாவிற்கு ஒரு பெண்ணோட வந்திருந்தியே அவள்தான் உன் காதலியா? 
    காலைக்காட்சியா……….மாலைக்காட்சியா..? @  


    40) கிரிக்கெட்டில் உலகசாதனை என்று சொல்றாங்களே விளையாடுவது பத்து நாடு...இதுல சாதனை செஞ்சா எப்படிய்யா உலகசாதனை ஆகும்! # டவுட்டு @ 

    Wednesday 23 November 2011

    ஆடுகளம் சரியில்லை என்ற மே. இந்திய அணியை வேறு ஏதாவது படத்தை பார்க்க சொல்லி கடுப்பேத்தியவர்கள்



    1)அந்த பிகரோட அண்ணன் ரவுடி - பயந்தவன் சொல்வது.
     அந்த ரவுடியோட தங்கச்சி செம பிகர்டா - துணிந்தவன் சொல்வது.
     # பயம் அறியான். @senthilcp



    2)திருமணதிற்குமுன் missed call 'ஐ கூட வலிய அழைத்து பேசும் ஆண்கள்,  திருமணதிற்குபின் வலிய வரும் call 'ஐ கூட missed call ஆக்குகிறார்கள்.!@ 



    3) ஒரு பொண்ணு பழைய மொபைல் வச்சிருந்தா இன்னும் அவளுக்கு காதலன் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.. # கண்டுபிடிப்பு @ 




    4)  பொண்ணுங்க மட்டும் இந்த உலகத்துல சந்தோசமா இருக்க முடியறதுக்கு காரணம் ,அவங்களுக்கு மனைவியோ கேர்ள் பிரண்டோ  கிடையாததே ! @ 


    5)  ரஜினி ஜெயிக்க தேவை எந்திரன்.நான் ஜெயிக்க தேவை என் திறன். @ 

    6) விஸ்வரூபம் என் சொந்தக் கதை -கமல் # கௌதமி கேரக்டர்ல யார் சார் நடிக்கிறாங்க ?? @


    7) ஷங்கர்,இந்தியனில் இளைஞனை கிழவராய் நடிக்கவைத்தார்;
    எந்திரனில்,மனிதனை எந்திரமாய் நடிக்கவைத்தார்;
    நண்பனில் விலங்கை  மனிதனாய் நடிக்கவைக்கிறார் # சாதனை @ 

    8பெண்களுக்கு பொய் பிடிக்குமா? பிடிக்காதா? சொல்லப் பிடிக்காது. கேட்கப் பிடிக்கும். @ 


    9) ஒரு சேவலின் குமுறல் : "காலையில் "கொக்கரக்கோ " என்றேன் ... 
        மதியம் "Cooker" ukkul விழுந்தேன் "...!! @ 


    10)  நட்பெனும் பெயரில் யாரேனும் ஒருவரால் கருவேப்பிலையாக்கப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இருக்கிறது. 


    11)  அலாரம் வைக்காமலே எழும்புறவன்  மகான், 
    அலாரம் அடிச்சாலும் ஆப் பன்னிட்டு தூங்கறவன் தான் மனிதன்
     # நான் மகான் அல்ல @


    12)  அது வரை பதட்டமாக இருக்கும் பெண்ணின் தந்தை தாலி கட்டியவுடன் ரிலாக்ஸ் ஆகிவிடுவார் # அப்பாடா  ஒருத்தன் சிக்கிட்டாண்டா!! எஸ்கேப்பு!! 


    13) ஆயுதங்கள் அற்ற வன்முறை. மௌனம்.. @ 


    14) வெள்ளக்காரன் படம்எடுத்துட்டா அதகுறையே சொல்லாம எல்லாரும்பாக்குறாங்கன்ற‌ ஒருதவறான எண்ணம் இருக்கு.
    ஏன் சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டானா? @ 

    15)  உலகிலேயே கொடுமையானது நாம சமைத்து அதை நாமே சாப்பிடுவது தான் - பேச்சிலர் லைப்... @ 


    16) நாலு நாள் உன்னைப் பார்க்காமல் , "சாப்பிடவே" இல்லையென சொல்லும் காதலிகளெல்லாம் ,பன்னி மாதிரி வீங்கிப் போயே இருக்கிறார்கள். @


    17) அந்தந்த ஊர்க்காரர்கள் வழி சொல்லும் சுவாரஸ்யம், கூகிள் மேப்களில் ஒருபோதும் கிடைப்பதில்லை...@


    18) தூக்கினால் கை வலிக்கிறது. இறக்கினால் மனது வலிக்கிறது. # குழந்தை @ 

    19)  விளம்பரம் பிடிக்காது என்பதே பெரிய விளம்பரம்! @


    20) அப்பா அன்டராயர் இல்லாமல் இருக்க மகன் செல்போனில் ஆண்ட்ராய்டு இருக்கா என கேட்கும் உலகு இது...!@ 


    21)குடிச்சிப் போட்ட பாட்டில வாங்கி எடைக்குப் போட்டானாம்.
     எடைக்குப் போட்ட காச வாங்கி குடிச்சிப் போட்டானாம் :-)   

    22) சவப்பெட்டி அழுகிறது! இறந்தது மனிதன் தானே என்னை ஏன் புதைக்கிறீர்கள்...@  


    23)  நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என்வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்? - முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய்  @ 


    24)நடிகர் நடிகைகள் நடிக்க நான் வந்ததே ஒரு விபத்துன்றாங்க. 
     ஆனா அடி என்னமோ நமக்குத்தான். @  sowmya


    25) காதலுக்கும் தடுப்பூசி கண்டுபிடித்திருக்கலாம்:-)  


    26) ஆயிரம் பொய் சொல்லியேனும், 'திருமணம்' செய்! அதற்குமேல் பொய் சொல்ல முடிந்தால், 'அரசியல்' செய்! @ 

    27) நேரத்தை வீணடிப்பது...நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் `ஆப்புகளில்`ஒரு வகை! @  


    28)கிழிந்த ஆடை உடுத்தும் ஏழைப்பெண்களுக்கு தேகம் தெரிவது அவமானம்; பல கிழியல்களுடனே ஆடை உடுத்தும் பணக்காரபெண்களுக்கு, 
    அதுவே ஆடம்பரம் # முரண்பாடு @


    29)  உலகமெல்லாம் மனிதர்களை படைத்த கடவுள் சைனா ஜப்பான்ல மட்டும் காப்பி பேஸ்ட்ட  யூஸ் பண்ணிட்டாரா.? 
    #ஒரே மாதிரி இருக்கானுவ ..


    30) இயேசு சிலுவையில் இரத்தம் வடிய ! போப்பாண்டவரோ புல்லட் புருஃப்பில் ! @ 


    31) கம்ப்யூட்டர் இஞ்சினியரும்,பிச்சைக்காரனும் அவங்கவங்க நண்பர்களைப் பார்க்கும்போது கேட்கும் கேள்வி,"மச்சி நீ இப்ப எந்த Platform ல work பண்ற?" @ 

    32)  நீங்க ரெண்டு பேரும் ஜாதகத்தின் படி ஏழேழு ஜென்மத்துக்கும் கணவன் மனைவியாக இருப்பீங்க! ''இதுக்கு பரிகாரம் எதுவும் இருக்குதுங்களா?'' @ 


    33)  "மனைவியை சமாளிப்பது எப்படி?" என்று கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை, நம்மகிட்டவே கூகுள் ஆலோசனை கேட்குது! @


    34) ஆடுகளம் சரியில்லை - மே.இ.தீவுகள் பயிற்ச்சியாளர்... 
    என்னங்க பண்றது அதுக்கு தேசிய விருது கொடுத்துபுட்டாங்கே.,அங்காடித் தெரு பாத்திங்களா ?  @


    35) எல்லா திருமணங்களிலும் மாப்பிள்ளையிடம் புகைப்படக்காரர்கள் கூறும் வாசகம் ''கடைசியா ஒரு தரம் நல்லா சிரிங்க'' @ 


    36)  90 எடுத்ததும் 'சிக்ஸர்' அடிங்கப்பா ‍- ச‌ச்சின் ம‌க‌ன். 
    # "90 அடிச்ச‌தும் மிக்ஸ‌ர் எடுங்க‌ப்பா- கேப்ட‌ன் ம‌க‌ன் @@iamkarki 

    37) குட்டிசுவரின் பரிணாம வளர்ச்சியே சமூக இணையதளங்கள் 
    #/ பேஸ்புக்/ ட்விட்டர்/ ஆர்குட் 


    38) வகுப்பறையில்டீச்சர் " வெளியே போடா " என்று திட்டினால்  நீ வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்@logarajaks

    Blogger Widgets