Thursday 1 December 2011

ஏரோப்ளேனில் போறவங்க மேல ரோட்டுல தேங்குன மழை தண்ணியை அடிக்கும் ஆட்டோக்காரன்

01)  அழகான பொண்ணு பக்கத்துல‌ இருக்குனு கண்டக்டர் கொடுக்க வேண்டிய    1 ரூபாயை இப்ப‌ கேட்க வேணாம்னு நெனச்சா, அந்த பொண்ணு 50 பைசாக்கு சண்டை போடுது. 




2)  நடிகனின் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்து ஓடியது ரசிகனின் முட்டாள்தனம். @ 





3) பேரன்பே உன் மௌனம் என் சிகரெட்டை போன்றது.. உபயோகப்படுத்தும் உன்னை மாத்திரமல்லாது பக்கத்திலிருக்கும் என்னையும் பாதிக்கிறது. @ 

4)  பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா, என்னை பிச்சைக்காரன் மாறி பார்க்கிறான்.  #விலைவாசி உயர்வு @





5)  பஸ்ஸில நாம தூங்கினா சொகுசு பயணம்! டிரைவர் தூங்கினா இறுதிபயணம்!! @





6)  கணவனை மனைவியும், மனைவியை கணவனும் twitter ல் பின் தொடர்கிறார்கள். வீட்டில் பேச நேரம் இருக்காதா? @





7) நரகம்னா என்ன? அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’  
சொர்க்கம்னா என்ன? அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! @ 


8) ஒரு பொண்ணு அவ லவ்வருடன் ஓடிப்போச்சி. அவ குடும்பமே சோகத்துல இருக்கு... . .. . மூணு நாள் கழிச்சி அவ வீட்டுக்கு திரும்பி வந்தாள். 

அப்பா : எதுக்குடி இங்க வந்த...?. 
பொண்ணு : Nokia சின்ன பின் சார்ஜர் வேணும்......?. @ 




9)  உடைந்து விடும் என்று தெரிந்தே தான் வாங்கி தருகிறோம், குழந்தைகளின் மனது உடைந்து விட கூடாதே என்பதற்காக # பலூன் # @ 





10)  அலாரம் கண்டிபிடுத்தவனை ஜெயில்ல போடுங்க! அதுல snooze ஐ கண்டிபிடுத்தவனை மட்டும் விட்டுங்க!! @





11) ஏரோப்லேன்லயே போனாலும் ரோட்டுல தேங்குன மழை தண்ணிய மேல அடிக்கிறவன் தான் சென்னை ஆட்டோக்காரன்...... @  





12)  தமக்கு சாதகமாக இல்லாத வரை எந்த மாற்றத்தையும் யாரும் விரும்புவதில்லை...! @ 





13)  காதல் ஒருமுறை என்பதெல்லாம் பொய்.   ஒருத்திமேல் ஒருமுறைதான் வரும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் @ 





14)  ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது வாழ்க்கை, 
ஒன்றை பெற்று பலவற்றை இழப்பது திருமண வாழ்க்கை.! @





15) பேருந்தில் படியில் தொங்கிய காலம்போய், இருக்கை பிடிக்கும் அவசரத்தில் தெரிகிறது "நம்மை நெருங்கும் முதுமை" @




16) சாலைகளில் மெதுவாக செல்லவும் எனறு போர்டு வைப்பதற்கு பதில் ஏதாவது அழகான ஹீரோயின் போட்டோ வைத்தால் நம்ம பயலுக பாத்து மெதுவா போவாங்கல்ல??? @  



17) ஓட்டப்பந்தயத்தில் முயல் ஆமையிடம் தோற்கக் காரணம் முயலாமையே! @ 




18) நான் ஊருக்கு வரேன் என்ன வேணும்னு நண்பன்ட்ட கேட்டேன். 
சின்னதா ஒரு i phone வேணுமாம். அடப்பாவி அதுக்கு நான் இன்னும் ஆறு மாதம் வேலை செய்யனும்டா @ 





19)  ஒருவரை ஒரே தவறுக்காக இரண்டாம் முறை மன்னிப்பது நம் தவறு. @ 





20)  அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்; காதல் அணுஅணுவாய் கொல்லும்... @ 





21)  தெரியாது என்று சொல்லவதை அவமானமாக கருதுவது போய்,பெருமையாக கருதும் காலம் வந்துவிட்டது #
இதில் தமிழும் சமையலும் முதல் 2 இடத்தை பிடிதிருக்கிறது@





22)  அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி; அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது அலைபேசி.! @ 





23)  சிலந்தியின் விடாமுயற்சியை பாராட்ட முடிவதில்லை..... ஒட்டடை அடிக்கும் பொழுது! @ 



24)  மண் அள்ளாதே, மலை உடைக்காதே என்பவர், ஏற்கனவே வீடு கட்டி செட்டில் ஆனவராகவே இருக்கக்கூடும் @





25)  இளமையில் வறுமையை விட கொடியது இளமையில் கருமை #எவளும் திரும்பி பாக்க மாட்டேங்கறா..! @ 





26)  ஒரு சினிமாவுக்காக சகமனிதன் மேல் கோபம் கொள்வது கண்டனத்திற்குரியது. @ 





27) தன் மகன் சிகரெட் பிடிப்பதை ஒரு தந்தை பார்ப்பதை விட ஆபத்தானது, தந்தை சிகரெட் பிடிப்பதை ஒரு சின்னஞ்சிறு மகன் பார்ப்பது @bharathiee





28) அறிவு கெட்ட தீவரவாதிகளா குண்டு வைக்குறது தான் வைக்குறிங்க எவ்வளவு அரசியல்வியாதிகள் வீடு இருக்கு! அங்க வைச்சா 2இன்1 ஆக இருக்கும் இல்ல?@Natarajan_G

29)செருப்பு கண்டு பிடிக்காத காலத்தில் இருந்தே பெண்கள் பேசும் வசனம் " 
செருப்பு பிஞ்சிடும் @pilisenthil




30)  கோவா பட விழாவில் பிரேசில் நாட்டு திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்! #வீராசாமி படத்தை பாக்காதீங்கனு சொன்னமே. மனுஷன் கேக்கல @





31) எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நகரும் நாட்கள், நிம்மதியை விட பயத்தையே அதிகம் தருகின்றன. #அடுத்துஎன்ன @NVaanathi : 




32) பர்சனல் லோன் அப்ளை பண்ணா எதுக்குனு பேங்க்லருந்து ஃபோன் பண்ணி கேக்குது ஒரு பொண்ணு. அது பர்சனல்னு சொல்லிட்டேன். @   



33)   எப்போதோ செய்த தவறுகளை நியாபகப்படுத்தி சண்டையிடும் காதலர்கள் பிரிவதற்கான காரணத்தை தேடுகிறார்கள் என்று அர்த்தம் @



34) எந்த பிரச்னை வந்தாலும் உடனே வீட்டுக்கு வந்து மனைவியை பாடச் சொல்லி கேட்பேன். அவள் பாடினால் அப்புறம் எந்த பிரச்னையும் பெருசா தெரியாது.! @

35)  சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
 சுடிதாரை சுற்றினால் நொந்து போவீர்கள்............. # நெட்ல சுட்டது @ 



36)   உலகில் உள்ள அணைத்து மொழிகளையும் எளிதாய் விரைவில் கற்றுக்கொள்ள சிறந்த வழி மொழிக்கு ஒரு பெண்ணை காதலிப்பதே !!! @



37) டீச்சர் : ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்? 
நம்மாளு: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிலோட கலர் ஆப்பிள் கிடையாது  @


38)  மூவாயிரம் ரூபாய் கொடுத்து அடிடாஸ் ஷூ வாங்கினவனை விட,முந்நூறு ரூபாய்க்கு ஷூ வாங்குனவனுக்கு ட்ரெய்ன்ல நல்லாத் தூக்கம் வருது. @ 



39) அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா #ரிசர்ச் @ 

40)  பெண் பிறந்திருக்கிறாள் என்று சந்தோஷமாக சொல்பவனிடம் பரவாயில்லை எந்த குழந்தைய இருந்தா என்ன என்று ஆறுதல் சொல்கின்றனர்



41)  அம்மா அன்பை காட்டுவாள், அப்பா அறிவை காட்டுவார், நண்பன் பிகரை காட்டுவான் ! பிகர் கடைசியில் டாட்டா காட்டுவாள் ! @



42)  ஹார்ன் அடித்துக்கொண்டேயிருந்தால் முன்னாலிருக்கிற வண்டி மறைந்து போய்விடும் # சென்னைவாசிகளின் கண்டுபிடிப்பு @ 


43)  கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # 
அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்? @ 


44) மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.! @ 


45) புகை பிடிப்பதால் வாழ்வில் 5 நிமிடங்கள் குறைகின்றன. சிரிப்பதால் வாழ்வில் 10 நிமிடங்கள் கூடுகின்றன அப்போ சிரிச்சிட்டே புகை பிடிச்சா  சாவே வராத? @

Blogger Widgets