Wednesday 23 November 2011

ஆடுகளம் சரியில்லை என்ற மே. இந்திய அணியை வேறு ஏதாவது படத்தை பார்க்க சொல்லி கடுப்பேத்தியவர்கள்



1)அந்த பிகரோட அண்ணன் ரவுடி - பயந்தவன் சொல்வது.
 அந்த ரவுடியோட தங்கச்சி செம பிகர்டா - துணிந்தவன் சொல்வது.
 # பயம் அறியான். @senthilcp



2)திருமணதிற்குமுன் missed call 'ஐ கூட வலிய அழைத்து பேசும் ஆண்கள்,  திருமணதிற்குபின் வலிய வரும் call 'ஐ கூட missed call ஆக்குகிறார்கள்.!@ 



3) ஒரு பொண்ணு பழைய மொபைல் வச்சிருந்தா இன்னும் அவளுக்கு காதலன் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.. # கண்டுபிடிப்பு @ 




4)  பொண்ணுங்க மட்டும் இந்த உலகத்துல சந்தோசமா இருக்க முடியறதுக்கு காரணம் ,அவங்களுக்கு மனைவியோ கேர்ள் பிரண்டோ  கிடையாததே ! @ 


5)  ரஜினி ஜெயிக்க தேவை எந்திரன்.நான் ஜெயிக்க தேவை என் திறன். @ 

6) விஸ்வரூபம் என் சொந்தக் கதை -கமல் # கௌதமி கேரக்டர்ல யார் சார் நடிக்கிறாங்க ?? @


7) ஷங்கர்,இந்தியனில் இளைஞனை கிழவராய் நடிக்கவைத்தார்;
எந்திரனில்,மனிதனை எந்திரமாய் நடிக்கவைத்தார்;
நண்பனில் விலங்கை  மனிதனாய் நடிக்கவைக்கிறார் # சாதனை @ 

8பெண்களுக்கு பொய் பிடிக்குமா? பிடிக்காதா? சொல்லப் பிடிக்காது. கேட்கப் பிடிக்கும். @ 


9) ஒரு சேவலின் குமுறல் : "காலையில் "கொக்கரக்கோ " என்றேன் ... 
    மதியம் "Cooker" ukkul விழுந்தேன் "...!! @ 


10)  நட்பெனும் பெயரில் யாரேனும் ஒருவரால் கருவேப்பிலையாக்கப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இருக்கிறது. 


11)  அலாரம் வைக்காமலே எழும்புறவன்  மகான், 
அலாரம் அடிச்சாலும் ஆப் பன்னிட்டு தூங்கறவன் தான் மனிதன்
 # நான் மகான் அல்ல @


12)  அது வரை பதட்டமாக இருக்கும் பெண்ணின் தந்தை தாலி கட்டியவுடன் ரிலாக்ஸ் ஆகிவிடுவார் # அப்பாடா  ஒருத்தன் சிக்கிட்டாண்டா!! எஸ்கேப்பு!! 


13) ஆயுதங்கள் அற்ற வன்முறை. மௌனம்.. @ 


14) வெள்ளக்காரன் படம்எடுத்துட்டா அதகுறையே சொல்லாம எல்லாரும்பாக்குறாங்கன்ற‌ ஒருதவறான எண்ணம் இருக்கு.
ஏன் சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டானா? @ 

15)  உலகிலேயே கொடுமையானது நாம சமைத்து அதை நாமே சாப்பிடுவது தான் - பேச்சிலர் லைப்... @ 


16) நாலு நாள் உன்னைப் பார்க்காமல் , "சாப்பிடவே" இல்லையென சொல்லும் காதலிகளெல்லாம் ,பன்னி மாதிரி வீங்கிப் போயே இருக்கிறார்கள். @


17) அந்தந்த ஊர்க்காரர்கள் வழி சொல்லும் சுவாரஸ்யம், கூகிள் மேப்களில் ஒருபோதும் கிடைப்பதில்லை...@


18) தூக்கினால் கை வலிக்கிறது. இறக்கினால் மனது வலிக்கிறது. # குழந்தை @ 

19)  விளம்பரம் பிடிக்காது என்பதே பெரிய விளம்பரம்! @


20) அப்பா அன்டராயர் இல்லாமல் இருக்க மகன் செல்போனில் ஆண்ட்ராய்டு இருக்கா என கேட்கும் உலகு இது...!@ 


21)குடிச்சிப் போட்ட பாட்டில வாங்கி எடைக்குப் போட்டானாம்.
 எடைக்குப் போட்ட காச வாங்கி குடிச்சிப் போட்டானாம் :-)   

22) சவப்பெட்டி அழுகிறது! இறந்தது மனிதன் தானே என்னை ஏன் புதைக்கிறீர்கள்...@  


23)  நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என்வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்? - முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய்  @ 


24)நடிகர் நடிகைகள் நடிக்க நான் வந்ததே ஒரு விபத்துன்றாங்க. 
 ஆனா அடி என்னமோ நமக்குத்தான். @  sowmya


25) காதலுக்கும் தடுப்பூசி கண்டுபிடித்திருக்கலாம்:-)  


26) ஆயிரம் பொய் சொல்லியேனும், 'திருமணம்' செய்! அதற்குமேல் பொய் சொல்ல முடிந்தால், 'அரசியல்' செய்! @ 

27) நேரத்தை வீணடிப்பது...நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் `ஆப்புகளில்`ஒரு வகை! @  


28)கிழிந்த ஆடை உடுத்தும் ஏழைப்பெண்களுக்கு தேகம் தெரிவது அவமானம்; பல கிழியல்களுடனே ஆடை உடுத்தும் பணக்காரபெண்களுக்கு, 
அதுவே ஆடம்பரம் # முரண்பாடு @


29)  உலகமெல்லாம் மனிதர்களை படைத்த கடவுள் சைனா ஜப்பான்ல மட்டும் காப்பி பேஸ்ட்ட  யூஸ் பண்ணிட்டாரா.? 
#ஒரே மாதிரி இருக்கானுவ ..


30) இயேசு சிலுவையில் இரத்தம் வடிய ! போப்பாண்டவரோ புல்லட் புருஃப்பில் ! @ 


31) கம்ப்யூட்டர் இஞ்சினியரும்,பிச்சைக்காரனும் அவங்கவங்க நண்பர்களைப் பார்க்கும்போது கேட்கும் கேள்வி,"மச்சி நீ இப்ப எந்த Platform ல work பண்ற?" @ 

32)  நீங்க ரெண்டு பேரும் ஜாதகத்தின் படி ஏழேழு ஜென்மத்துக்கும் கணவன் மனைவியாக இருப்பீங்க! ''இதுக்கு பரிகாரம் எதுவும் இருக்குதுங்களா?'' @ 


33)  "மனைவியை சமாளிப்பது எப்படி?" என்று கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை, நம்மகிட்டவே கூகுள் ஆலோசனை கேட்குது! @


34) ஆடுகளம் சரியில்லை - மே.இ.தீவுகள் பயிற்ச்சியாளர்... 
என்னங்க பண்றது அதுக்கு தேசிய விருது கொடுத்துபுட்டாங்கே.,அங்காடித் தெரு பாத்திங்களா ?  @


35) எல்லா திருமணங்களிலும் மாப்பிள்ளையிடம் புகைப்படக்காரர்கள் கூறும் வாசகம் ''கடைசியா ஒரு தரம் நல்லா சிரிங்க'' @ 


36)  90 எடுத்ததும் 'சிக்ஸர்' அடிங்கப்பா ‍- ச‌ச்சின் ம‌க‌ன். 
# "90 அடிச்ச‌தும் மிக்ஸ‌ர் எடுங்க‌ப்பா- கேப்ட‌ன் ம‌க‌ன் @@iamkarki 

37) குட்டிசுவரின் பரிணாம வளர்ச்சியே சமூக இணையதளங்கள் 
#/ பேஸ்புக்/ ட்விட்டர்/ ஆர்குட் 


38) வகுப்பறையில்டீச்சர் " வெளியே போடா " என்று திட்டினால்  நீ வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்@logarajaks

No comments:

Blogger Widgets