1) அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் வாங்கி படித்து விட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி “அண்ணா யாரையாச்சு லவ் பண்ணுறியா….!!!..” @vedupili
2) காதலர்களை கவுரவ கொலை செய்பவர்கள், அவர்களை அப்படியே வாழவிடுவதுதான் பெரிய தண்டனை என்பதை அறியாதவர்கள். @ipokkiri
3)பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும்.@thoatta
4) எனக்கென்னவோ பிரசன்னா"முரண்"படத்த விட தன் கல்யாணத்தில் பெரிய"ரிஸ்க்"எடுக்கிறதா தோணுது!@paramesh2006
9) அருகம் புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அவள் அப்பன் எருமை போல மேய்ந்துவிட்டான். @baisudeen
2) காதலர்களை கவுரவ கொலை செய்பவர்கள், அவர்களை அப்படியே வாழவிடுவதுதான் பெரிய தண்டனை என்பதை அறியாதவர்கள். @ipokkiri
3)பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும்.
4) எனக்கென்னவோ பிரசன்னா"முரண்"படத்த விட தன் கல்யாணத்தில் பெரிய"ரிஸ்க்"எடுக்கிறதா தோணுது!@paramesh2006
5) எல்லா மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக இருந்தவர்கள்தான். இந்த தத்துவம் ஏன் மேனேஜர்களுக்கு மட்டும் புரியவே மாட்டேங்கிறது.@naaraju:
6) மரத்தடியில் பயின்ற பிள்ளைகள், கான்கிரீட் கட்டடங்களில் பயிலும் நம் பிள்ளைகளை விட நிச்சயம் சந்தோஷமாக இருந்திருப்பார்கள் ...@Nmangai
7) இல்லாத கேள்விக்கு பதில் யோசிச்சா அவன் ஞானி, இல்லாத கேள்விக்கு பதில் கண்டுபுடிச்சா அவன் விஞ்ஞானி.@Kannamoochi
10) எப்போதும் எதையோ ஒன்றை எதிர்பார்த்தோ, எதையேனும் தேடியோ,எதற்கேனும் ஏங்கியோ,எதற்காகவோ காத்திருப்பிதிலோ கழிகிறது வாழ்க்கை...@Nmangai
11) இலங்கை செல்ல விருப்பம் -விஜய் #எதுங்ணா நீங்க உலக மேப்லருந்தே அழிப்பேனு சொன்னீங்களே அதுங்க்ளாண்ணா. @minimeens
12) மனைவியை காதலிக்கத் தெரியாதவன், சுவாரஸ்யமான நாவலின் பின் பாதியை இழந்தவன்! @jeevanlancer
13) மணப்பெண்ணுக்கு செய்ற அலங்காரத்தில பாதியாவது மணமகனுக்கு செய்யுங்கப்பா! பயம் தெளியட்டும்!! @naiyandi
14) நடு ராத்திரியில நல்லகாலம் பொறக்குதுன்னு கோடங்கி சொல்லிட்டு போறான்;நாளை மனைவி ஊருக்கு போகிறாள்! @naiyandi
15) சொத்துக்கணக்குகளை பொறுத்தே நம்மிடம் சொந்தங்களின் கணக்கு வழக்கு அமைகிறது.@arattaigirl
16) நோக்கு வர்மம் அழிய வில்லை. தமிழகத்தில் எல்லா மனைவிகளும் தங்கள் கணவர்களை அடக்கவும்,முடக்கவும் அதைதான் பயன்படுதுகின்றனர்! @shahulbook
17) "நீ பிறந்தவுடன்!.. அவசர, அவசரமாய், தமிழ் அகராதியில்!.. சேர்க்கப்பட்ட வார்த்தை தானோ?.... ** அழகு **. @soshrulez
18) அன்று நதிக்கரை ஓர விவசாயத்தில் தோன்றிய நாகரிகம்,இன்று சாக்கடை ஓர உணவகங்களில் திணறிக்கொண்டிருக்கிறது! @PG_whys
19) தீமை செய்தால் மிருகமாகவும், நன்மை செய்தால் தெய்வமாகவும் பார்க்க படும் மனிதன் எப்போது மனிதனாக பார்க்க படுகிறான்? @naanenaan
20) தங்கத்தின் விலையேற விலையேற பெண்களின் திருமண வயது ஏறும்- நேர் விகிதம்! @naiyandi
21) எந்த நூற்றாண்டில் வந்த நோய்னாலும் அத சரிசெய்ய நம்ப டாக்டர்.ராமதாஸ் இருக்காரு.இது தெரியாம சில பேர் படம் எடுத்துட்டாங்க. @7thsense 7ஆம் அறிவு
22) அம்மா,நான் கட்டினது எல்லாம் மாத்துறீங்க இந்த ராசாத்தி மற்றும் தயாளு அம்மாளையும் மாத்தினீங்கன்னா புண்ணியமாபோவும்- கலைஞர் “@Sei_vinai:
23) ஒடிஸா' வாக மாறியது 'ஒரிஸா' # அப்படியே தமிழ்நாட்டையும் 'தமிழீழம்' என மாத்துங்க இங்கேயாவது அது மலரட்டும் ..” @karna_sakthi
24) கலண்டரில் தினமும் தேதி கிழிக்கிறது முக்கியம் இல்லை அன்றைய தேதிக்கு என்ன கிழிக்கிறோம் அதான் முக்கியம்:) @pinjimanasu
25) பணம் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடாது. ஆனால், எல்லா பணப் பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.! @minimeens
26) நிச்சயமா,சத்தியமா எனக்கு ட்விட்டர் - ஃபேஸ்புக் தாண்டி ஒரு லைஃப் இருக்கு. ஆனா அதோட பாஸ்வேட் மறந்து போச்சே..
27)விஜய் படம்னா கிண்டல் பண்ணுவ இன்னிக்கி வேலாயுதத்துக்கு மொத ஆளா நிக்குற? ஆபிஸ்ல மெனேஜரோட ஒரு பிரச்சின # Go to hell ன்னு சொல்லிட்டாரு
28) காஞ்சனா படம் பார்த்து எங்கள் குடும்பமே சிரித்தது - விஜய் பேட்டி # தம்பீ உங்க படம் பாத்துட்டு ஊரே சிரிக்குது @vinodhkrs
29) அன்புள்ள அம்மா, எமெர்ஜென்ஸி லைட்டுக்கு சார்ஜ் ஏத்தற அளவுக்காவது கரண்ட் சப்ளை செய்யவும். தங்கள் இருட்டிலுள்ள தமிழன். @iParisal
30) படம் பிடிக்கலைனா இன்டர்வெல்லில் எழுந்து போங்கப்பா. தியேட்டர் copy v.c.d ல பாக்கும்போது மறைக்குதில்ல? @செசெந்தில்குமார்
No comments:
Post a Comment